• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞர் காங்கிரசார் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2020 தண்டோரா குழு

கோவையில் இளைஞர் காங்கிரசார் சார்பாக நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் மாநகராட்சி வளாகத்தில் வைத்திருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மனிதஉரிமைகள் குழு சார்பாக காந்தி ஜெயந்தி விழா மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இதில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மனித உரிமைதுறை மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சமூக விலகல் மற்றும் முக கவசங்கள் அணிவது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ,பிரசாத்,நசீமுல்லா,ஜேம்ஸ், சதாம்உசேன் ஹா௫ன்செரீப், உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க