• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு கொரொனா

October 1, 2020 தண்டோரா குழு

வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு கொரொனா தொற்று உறுதி வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிய துணை வேந்தர் உத்திரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வீடுகளில் இருந்து பணிபுரிய துணைவேந்தர் உத்திர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர்.பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடத்தப்படும் என தெரிகிறது.ஒரே நாளில் வேளாண்மைப்பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க