• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் பிறந்தநாள் சேவா வாரத்தை முன்னிட்டு முதியோர்களுக்காக அறுசுவை உணவு

September 30, 2020 தண்டோரா குழு

கோவையில் மோடியின் பிறந்தநாள் சேவா வாரத்தை முன்னிட்டு முதியோர்களுக்காக பிரத்யேகமாக சமைக்கப்பட்ட சைவ வகை உணவுகளான சாதம்,கீரை வகை கூட்டு பொரியல்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப் வகைகள் என அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பதினேழாம் தேதி முதல் பல்வேறு நலத்திட்டங்கள் ,சிறப்பு வழிபாடுகள்,ஏழை குடும்பங்களுக்கு கல்வி உதவிகள் என பல்வேறு சேவைகளை தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.சேவா வாரமாக கொண்டாடப்பட்டு வரும் இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தேசிய நகர்புற இயக்கத்தின் திட்டத்தில் உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சுமார் எழுபத்தி ஐந்து முதியோர்களுக்கு அறுசுவைகளுடன் கூடிய மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட தலைவர் ராஜன்,மாவட்ட பிரபாரி ஜோதி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் துணை தலைவர்கள் மது,ஓம் ஆனந்த்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் முதியோர்களுக்காக பிரத்யேகமாக சமைக்கப்பட்ட சைவ வகை உணவுகளான சாதம்,கீரை வகை கூட்டு பொரியல்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப் வகைகள் ,பாயாசம் என அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட செயலாளர் அச்சப்பன், ராமலிங்கம், ஜெகன், ஆதரவாளர்கள் கணபதி, ஜான்சன், துளசிதர்,ஜூவாதிஸ்,பி.எம் குமார் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க