கோவை க.க.சாவடி பகுதியில் ஆபாத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து வேலை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை க.க.சாவடி பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் நீண்ட நாட்களாக சிமெண்ட் உடைந்து கிழே விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்ட் உடைந்து,உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.தற்போது மழை காலம் என்பதால் கம்பம் எப்போது வேண்டுமானும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் உடைந்த பாகங்கள் வழியாக மின்சாரம் கசிந்து கம்பத்தை தொடும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு உடைந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பத்தின் மீது மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து ஏறி வேலை செய்தார்.அதை கண்ட அப்பகுதி மக்கள் கவனமாக இருங்கும் படி கூறியதோடு, உடனடியாக கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தி இன்று மின்கம்பத்தை சீர் செய்து வருகின்றனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !