• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக வெறிநோய் தினம் – கோவை அரசு கால்நடை மருத்துவமனையில் சிறப்பு தடுப்பு முகாம்

September 28, 2020 தண்டோரா குழு

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனையில் சிறப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது.

வெரிநாய், மற்றும் குதிரை, நரி, பூனை உள்ளிட்ட பாலூட்டி கால்நடைகள் கடிப்பதால் ரேபிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்படும். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசயை 1988 ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார்.அவர் மருத்து கண்டுபிடித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெறிநோய் தடுப்பு தினமாக கடை பிடிக்கபடுகிறது. இந்த ஆண்டு வெரிநோயை தினத்தை முன்னிட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனை கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாய், பூனை, உள்ளிட்ட வீட்டு விலங்குகளை அழைத்து வந்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது மிகவும் ஆபத்தான நோய் என்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கால்நடைகள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் தனியாக இருக்கும் தடுப்பூசிகளை முன்னெச்சரிக்கையாக போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க