• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன? – SP சரண்

September 28, 2020 தண்டோரா குழு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
செப்.25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தார்கள்.

நடிகர் விஜய் எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்படும் முன்பு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த அஜித் நேரில் வரவுமில்லை, இரங்கல் அறிக்கை கொடுக்கவுமில்லை.இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் அஜித் எனக்கு நல்ல நண்பர். அஜித் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தியிருந்தால் என்ன? அதுபற்றி பேச வேண்டியதில்லை. இதை ஒரு விஷயமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. அப்பா இல்லை. எங்களிடம் வதந்திகளுக்கு விளக்கம் கேட்காதீங்க என எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

மேலும் படிக்க