• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் துறை சார்பாக முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ 79 ஆயிரம் அபராதம்

September 27, 2020 தண்டோரா குழு

கோவை மாநகரில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியே கடை பிடிக்காதவர்களுக்கு கோவை மாநகர போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை 5 மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கோவை மேற்கு பகுதியில் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 23 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை மத்திய பகுதியில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8000 தெற்குப் பகுதியில் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27,000 கிழக்குப் பகுதியில் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20,800 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 355 வழக்கில் மூலம் ரூபாய் 79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க