• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற பி.டி.சுரேஷிற்கு நினைவேந்தல் கூட்டம்

September 27, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட அனைத்து உடற்பயிற்சிக் கூடம் சார்பில் கொரோனா தொற்றால் மறைந்த மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற பி. டி. சுரேஷிற்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு கோவை காந்திபார்க்கில் அமைந்துள்ள மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

நினைவேந்தல் கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில பளு தூக்கும் சங்க துணைத் தலைவரும் கோவை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனருமான அ. முரளிதரன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்

கேரளாவில் 1979 – ல் பிறந்து கோவையில் தனது வாழ்க்கையை தொடர்ந்த பி. டி. சுரேஷ் கோவை அமைச்சூர் பாடி பில்டர், ஆண் அழகன் மற்றும் சிறந்த உடற்கட்டு சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரனமாக தனது 44-வது வயதில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அன்று நம்மைவிட்டு பிரிந்து விட்டார். இவர் தனது வாழ்க்கையில் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்கியவர். இவர் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நல்ல ஆரோக்கியத்துடனும், பல ஆண் அழகன் போட்டியில் பங்கேற்று பல பட்டங்களை வெல்ல உதவி புரிந்துள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறைகளுக்கு மேல் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும், 2009 – ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த உடற்பயிற்சி கூடங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்லூரிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவில் முன்னதாக கோவை அமைச்சூர் பாடி பில்டர், ஆண் அழகன் மற்றும் சிறந்த உடற்கட்டு சங்கத்தின் செயலாளர் ரகுமான் வரவேற்று விழா முடிவில் நன்றி கூறினார். மேலும் விழாவில் மூத்த சங்க தலைவர் ஜெயபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க