• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி

September 26, 2020 தண்டோரா குழு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் அவருக்கு இன்று இசை அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், கோவையை சேர்ந்த மாநில அளவிலான இசைக் கலைஞர்கள் சார்பில் அலெக்ஸ், சிம்பொனி ராஜ், ஆனந்த் தலைமையில் இசைக்குழுவினர் ரகு,தங்கவேல், ராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பிரபல பாடல்களை இசைக்குழுவினர் பாடி அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக பாலசுப்பிரமணியத்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க