• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

September 24, 2020 தண்டோரா குழு

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கும் சர்க்கர நாற்காலியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட பணிகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் 50 சக்கர நாற்காலிகள், மேலும் காது கேட்கும் கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதற்கட்டமாக பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலியையும்,நான்கு பேருக்கு காது கேட்கும் கருவி, வாட்டர் பெட் பொருத்திய சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் காவல்துறை ஆணையாளர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க