வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி அ.தி.மு.க.நிர்வாகி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்றார்.
கோவையை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு. அ.இ.அ.தி.மு.கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கழக துணை செயலாளரான இவர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த வேண்டி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் வாடகை மையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்ப உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மூன்றாவது முறையாக அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட வேண்டி இது போன்று சிறப்பு வழிபாட்டை செய்துள்ளதாக தெரிவித்தார்.கோவையில் இருந்து இது போன்று ஹெலிகாப்டரில் பறந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !