• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோஜா தினம் அனுசரிப்பு

September 22, 2020 தண்டோரா குழு

உலக ரோஸ் தினமானது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெலிண்டா ரோஸ் என்ற 12 வயது சிறுமி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு,கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு சார்பில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நோயாளிகளுக்கு ரோஜா மலரை கொடுத்து குணமடைய வாழ்த்து சொல்லும் ரோஜா தினம் 2020 இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் டாக்டர்கள் மதுலிகா விஜயகுமார்,ரூமேஷ் சந்தர், பாஸ்கர் பாண்டியன் ராவ்,புற்றுநோய் துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் புற்றுநோய் நோயாளிகளுக்கு ரோஜா தினத்தினை முன்னிட்டு ரோஜா பூக்கள்,பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்கள் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க