September 22, 2020 தண்டோரா குழு
கோவை உக்கடத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் உடல் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த உக்கடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்,இது கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.