• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ஆட்சியரிடம் மனு

September 21, 2020 தண்டோரா குழு

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உருமாண்டம்பாளையம் பகுதியைசேர்ந்த பழனிசாமி லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார்.அவரிடம் வருமானவரித்துறையினர் கடந்தாண்டு ஜீன் மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர்.

இதனையடுத்து பழனிச்சாமியின் உடற்கூராய்வை,பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும்,அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூராய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால் அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து , நிவாரணம் வழங்க உத்திரவிட்டும் காலம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி அவரது மனைவி , மகன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க