• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்ட கொரோனா கிட்டுகள்

September 18, 2020 தண்டோரா குழு

கோவை கரும்புகடை உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உட்பட்ட நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகளை அலட்சியாக வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம்,வைட்டமின் சி-மாத்திரை, ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங்கிய கிட்டுகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வந்த கொரோனா தடுப்பு கிட்டுகளை உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழங்கப்படும் கிட்டுகளை அலட்சியமாக வைத்துள்ளதால், திடிரென மழை பெய்தால் அனைத்து கிட்டுகளை மழையில் நனைந்து விணாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது,

சாலை ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது மண் தூசிகள் கிட்டுகள் மீது விழுகிறது. மழை வந்தாலும் நனைந்த வீணான கிட்டுகளை விநியோகம் செய்ய முடியும் அரசு அறிவித்து இத்தனை நாட்கள் ஆகிய நிலையிலும் இது வரை இப்பகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பு கிட்டுகளை வழங்கவில்லை குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் படிக்க