• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தில்லியில் மாசு குறை பாட்டுக்குத் தீர்வு காண உயர்நிலைக் கூட்டம்

November 2, 2016 தண்டோரா குழு

தில்லியில், அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் ஆபத்துக்கு உரிய வகையில் புகை மாசு கலந்துள்ளது, இதற்கு தீர்வு காண, உயர்நிலைக் கூட்டத்தை, அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார்.

தில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இதனால், நகரின் பெரும்பகுதிகளில் அபாயகரமான அளவில், காற்றில் மாசு கலந்து, சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. சாலைகளில் புகைப் படலம் காணப்பட்டதால், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் இருந்தது.

இந்நிலையில், அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டத்தை, மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார். இதில், மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக, புதிய, ‘மொபைல் ஆப்’ உருவாக்குவது என, முடிவு செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து நிருபர்களிடம் சிசோடியா, கூறுகையில், பிரச்னைக்கு தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

மேலும் படிக்க