• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

September 17, 2020 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில்,கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

மருத்துவமனையில் உடல் நல பாதுகாப்பு பணியாளர்கள்,நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக நோயாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.நிகழ்ச்சியில் தீயணைப்பு பாதுகாப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அரங்கினை தலைமை நோடல் அலுவலர் டாக்டர் முரளி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தீயணைப்பான் கருவிகளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பேராசிரியர் ஜெயவர்த்தனா, டி.விஜயா, டாக்டர் ரபி, மருத்துவ இயக்குனர் ராஜ்குமார், நர்சிங் சூப்பரெண்ட் டாக்டர் அனுராதா, டாக்டர் ராமமூர்த்தி, தீயணைப்புப் பிரிவு டாக்டர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உலக நோயாளிகள் பாதுகாப்பு வாரம் ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் நோயாளிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிஎஸ்ஜி மருத்துவமனை டாக்டர்கள் பேசியுள்ளனர்.

மேலும் படிக்க