• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நஞ்சுண்டாபுரம் பகுதியில் மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு

September 15, 2020 தண்டோரா குழு

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.நேற்று மாலையிலிருந்து பலத்த காற்று வீசிய நிலையில் திடிரென குடியிருப்பில் பகுதி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் உராய்வு ஏற்பட்டது.இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் தீப்பிடித்து பட்டாசு போல் வெடித்துச்சிதறியது.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இதையடுத்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே பொதுமக்களே தீயை அணைத்தனர்.அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, ஒயர்களை சரி செய்தனர்.இதையடுத்து மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.உடனடியாக பொதுமக்களே தீயை அணைத்து, மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்ததால் பொரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க