• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு – பலத்த போலீஸ் பாதுகாப்பு

September 13, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இன்று 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை கோவையில் மட்டும் 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ள நிலையில் தேர்வு மையத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக 16 மையங்கள் அமைக்பப்பட்டுள்ளன. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 12 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்வை கண்காணிக்க ஒரு தேர்வு அறைக்கு இரு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்னர்.தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 11 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். பின்னர் 11.30 மணி அளவில் மையத்தின் உள்ளே ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் அதிக உடல் வெப்பநிலை கொண்ட மாணவர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.மதியம் 1.30 மணிக்கு, ஒவ்வொரு மாணவர்களாக சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து மாணவ,மாணவிகளும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப் பட்டுள்ளது.நீட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வு மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க