• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வை கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

September 12, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நீட் தேர்வை அரசு அறிமுகப் படுத்தியதில் இருந்தே தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இருப்பினும், பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.

நேற்று முன்தினம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, இன்று காலை ஜோதி துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதால், அரசியல் தலைவர்கள் பலர் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க