September 11, 2020
தண்டோரா குழு
நடிகர் வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகரும் சினிமா நட்சத்திரமுமான நடிகர் வடிவேலு பாலாஜி மூளையில் ரத்த கசிவு காரணமாக தனியார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,
நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
உயிரிழந்த வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஸ்ரீகாந்த் 10ஆம் வகுப்பும், மகள் ஸ்ரீதேவி 6ஆம் வகுப்பும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.