• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

September 11, 2020 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முட்செடி மற்றும் செடிகள் அதிகம் வளர்ந்த நிலையில் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வருவதை கண்டு நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில் என்ற ஊழியர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்த இறந்தாரா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க