• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டம் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

September 11, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டம் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன்
எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர். கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் இந்த திட்டத்தினை பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்தார். அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தனர்.

நிகழ்வுகளின் போது மக்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,

சாலையோர வியாபாரிகளில் கடனுதவி வேண்டுமென்போர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் இது குறித்து சாலையோர வியாபாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஏதாவது குறைகள் இருப்பின் மக்கள் அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறினால் அதை விரைந்து முடித்து தர பாஜக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க