September 9, 2020
தண்டோரா குழு
கோவையில் காதல் மனைவியை பிரித்த காரணமாக, திருமனம் ஆன முன்றாவது நாளில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ், இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளில், மணமகளின் வீட்டார் காவல் நிலையத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போத்தனூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பதாக அழைத்துள்ளனர்.
மேலும் மணமகன் மற்றும் மணமகள் தனித்தனியாக விசாரித்த காவல்துறையினர் மணமகளை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தனது மனைவியை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைப்பதற்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை குறித்து மணமகன் மனவேதனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவியை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றதை அறிந்த மணமகன் வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் திருமணமான மூன்றாவது நாளில் மனைவியை பிரிந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் மண மகனின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதற்கு ஒரு சரியான நடவடிக்கையினை எடுத்து, இறந்த மணமகனின் மரணத்திறக்கு சரியான தீர்வு காண வேண்டுமென மணமகன் குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.