• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ஒருவர் கொலை – 2 பேர் கைது

September 5, 2020 தண்டோரா குழு

நீலம்பூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யபட்ட காளியப்பன் கொலை வழக்கில் அவரது மற்றும் அவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் வசிப்பவரான ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டவர் காளியப்பன். இவர் அவரது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார்.அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி ராஜாமணி மற்றும் அவர்களது வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் காளியப்பனை கொலை செய்யத் திட்டமிட்டு நடைபயிற்சியின் போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதையடுத்து, ஹரி கிருஷ்ணன் மற்றும் காளியப்பனின் மனைவி இராஜமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க