• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாட்டு வெடி குண்டுகளா? – வனத்துறையினர் சோதனை

September 5, 2020 தண்டோரா குழு

அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவை வனக்கோட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கரடியை கொள்வதற்காக பழங்கள், கரியில் வெடிகுண்டு தயாரித்து வைப்பதாக வந்த ரகசிய தகவலின்படிபெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கட்டஞ்சி மலையை ஒட்டிய கரடிமலை கிராமத்தில் 4 இடங்களில் 6 வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி வனப்பாதுகாவலர் செந்தில், தினேஷ் ஆகிய இருவர் தலைமையில் வனவர் உட்பட வனத்துறை அலுவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர், காவல்துறையினர் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டுகள் ஏதேனும் பதுங்கி வைக்கப்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது. கரிக்காகவும், பயிர் சேதத்தை தடுப்பதற்காக அவுட்டுக்காயால் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் கொல்லப்படுகின்றன.வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த வாரம் இந்த அவுட்டுக்காயால் பசுமாடு பாதிக்கப்பட்டது பல்வேறு கேள்வி எழுப்பிய நிலையில், வனத்துறையினர்.இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு இந்த அவுட்டுக்காய் தயாரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், தயாரிப்பை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க