• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா

August 24, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது. கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 392 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யான் ஜூவல்லர்ஸ் நகை கடை பணியாளர்கள் 58 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.தொடர்ந்து, அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டு, அதன் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில்,காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உள்ள தொழிலாளருக்கு தொற்று உறுதியானது.இதனால் அங்குள்ள மற்ற தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது.கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க