• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீயணைப்பு துறையினருக்கு ரோட்டரி இன்ட்டஸ்டரியல் சார்பில் சானிடைசர்

August 20, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறையினருக்கு ரோட்டரி இன்ட்டஸ்டரியல் சார்பில் சானிடைசர் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோணா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்களை தடுப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ,கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் ரோட்டரி இன்ட்டஸ்ட்ரில் சிட்டி கிளப் சார்பில் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு சானிடைசர் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன் உதவி அதிகாரி தவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி இன்டஸ்ரியல் தலைவர் ராஜசேகர் நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர் செயலாளர் பிரபுராம் இயக்குனர் வேல்முருகன் என்ஜினியர் சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க