• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 70 வயது முதியவர் கைது

August 18, 2020 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 70 வயதுடைய முதியவரை, போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை இராமநாதபுரம், கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். 70 வயதான இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் அவரது கடைக்கு திண்பண்டம்வாங்க வந்த 10 வயது சிறுமியை கனகராஜ் கடையில் வைத்துபாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்தவற்றை, அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக, அவர்கள் சம்பவத்தை குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் 70 வயதான மளிகை கடை உரிமையாளரை, போலீசார் விசாரணை மேற்கொண்டு,கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், மனித உயிருக்கு ஊறு விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ், இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க