• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர் இராசாமணி

August 15, 2020 தண்டோரா குழு

கோவையில் வ.உ.சி மைதானத்தில் நாட்டின் 74 வது சுதந்திர தின விழா சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து கொண்டாட்டப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசமணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இவ்விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் ஆகியோர் பங்குபெற்றனர்.

கோவையில் கொரொனா தொற்று தடுப்பு முன் களப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது, அதில் சுகாதாரத்துறையில் 28 பேருக்கு, காவல்துறையில் 23 பேருக்கும், வருவாய் துறையை சேர்ந்த 20 பேருக்கும், நகராட்சி நிர்வாகத்தில் 18 பேருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆட்சியர் கையில் விருதுகளை பெற்றவர்கள், தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

மேலும் படிக்க