• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கூல் ஊற்றும் நிகழ்வு

August 14, 2020 தண்டோரா குழு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கூல் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று கோவில்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை கோனியம்மன் கோவில் முன்பு அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கூல் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செந்தில்,மாநில இளைஞரணி செயலாளர் சி.டி.கண்ணன் மற்றும்
இந்து மக்கள் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசன்ன சுவாமிகள்,

மக்களின் மன நிம்மதிக்காக ஆலயங்கள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆடி மாதத்தில் இந்து கடவுள்களுக்கு கூல் ஊற்ற அரசுக்கு என்ன தயக்கம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க