• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொலை வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம் போலீசார் வலை

August 10, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேம் சாகர் நாயக் (வயது 30). திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இவர் தனது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுகுறித்து பந்தய சாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க