• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடரும் டரவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம்

August 7, 2020 தண்டோரா குழு

கோவையில் தொடரும் டரவுசர் கொள்ளையர்கள் ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளையடிக்க
முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் டரவுசர் அணிந்து கொள்ளையர்கள் சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், கோவை இருகூர் A.G. புதூர் அருகே உள்ள புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி உள்ளே நுழைந்துள்ளனர்.அப்போது பொதுமக்கள் அருகில் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்பு சிங்காநல்லூர் பகுதியில் கோத்தாரி நகரில் ஒருவர் ஒருவரது வீட்டில் கதவை உடைக்க முற்பட்டபோது பொதுமக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி மீண்டும் சிங்காநல்லூர் கதிரவன் கார்டன் அருகில் பகுதியிலுள்ள ஒருவரது வீட்டில் அனைவரும் உள்ள பொழுது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர முயன்றுள்ளனர்.அப்போது சத்தம்போட்டதால் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய மீண்டும் அருகேயுள்ள சுருதி என்கிளேவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டனர்.வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவே அவரது மனைவி மகள் உடனே ஓடி வந்த சத்தம்போட்டு பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தனர்.இதனால் கொள்ளையர்கள் பயந்து ஓடிப் போய் விட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள உள்ள மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க