• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறிச்சி பகுதியில் கலைஞரின்2ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர் தூவி அஞ்சலி

August 7, 2020 தண்டோரா குழு

கோவை குறிச்சி பகுதி திமுக சார்பில் கலைஞரின்2ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் என அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதே போல் கோவை குறிச்சி பகுதி திமுக சார்பில் திமுக பிரதிநிதி நிஷார் ஏற்பாட்டில் முன்னாள் நகரமன்ற தலைவர் குறிச்சி பிரபாகரன், மற்றும் மீனவரணி அமைப்பாளர் காதர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .தொடர்ந்து கலைஞரின் நினைவுநாளையொட்டி நிஷார்,நாகராஜ் அறக்கட்டளையின் சார்பாக பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க