• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

August 7, 2020

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி நிர்பார் நிதி
(சுயசார்பு) திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கியின் மூலம் கடன் பெறலாம் என அறிவித்திருந்தது. எனவே, வங்கிக்கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசி எண், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்கள் ஆகிய
ஆவணங்களுடன் கீழ்ழ்கண்ட மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.

Screenshot_2020-08-07-13-52-22-383_com.google.android.apps.docs

மேலும் படிக்க