• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நண்பருடன் சேர்ந்து கற்பழித்த இருவர் கைது

August 5, 2020 தண்டோரா குழு

கோவையில் 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கற்பழித்த சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சேர்ந்தவன் சந்தோஷ்.23 வயதான இவன் அங்குள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்துவருகிறான். இவன் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெளியில் செல்லலாம் என கூறி 13 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு கூட்டி வந்துள்ளான்.அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரபு நகரைச் சேர்ந்த அவனது நண்பன் சதீஷ் என்பவனுடன் சேர்ந்து காதலன் சந்தோஷ் அச்சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான்.இது குறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அருளரசு உத்தரவின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி சுந்தரம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி மற்றும் உதவி ஆய்வாளர் குப்புராஜ் பயிற்சி உதவி ஆய்வாளர் கார்த்தியேன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளான சந்தோஷ் மற்றும் சதீஷ் இருவரையும் 13 வயது சிறுமியை கற்பழித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க