• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் – கோவையில் ஆர்ப்பாட்டம்

August 5, 2020 தண்டோரா குழு

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் மோடி தலைமையில் 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறையில் அமைத்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என கோவை கரும்புக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பொருளாதார சீரழிவை கொரோனா என்ற பெயரில் மறைப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் V.M. அபுதாஹிர் கண்டன உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க