• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் மக்கள் அச்சம்

August 4, 2020 தண்டோரா குழு

கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.

இந்த நிலையில் காற்றில் பறந்த நுரை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி வாசிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இவ்வாறு வெண்நுரை கிளம்புவதாகவும், இது போன்று நுரை கிளம்புவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் கழிவுப்படலம் படர்ந்துள்ளதை பலர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் படிக்க