• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் மக்கள் அச்சம்

August 4, 2020 தண்டோரா குழு

கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.

இந்த நிலையில் காற்றில் பறந்த நுரை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி வாசிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இவ்வாறு வெண்நுரை கிளம்புவதாகவும், இது போன்று நுரை கிளம்புவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் கழிவுப்படலம் படர்ந்துள்ளதை பலர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் படிக்க