• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது

August 4, 2020 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றலாம் அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு பெய்த கனமழையால் சித்திரை சாவடி தடுப்பணை நிரைந்து நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஏற்கனவே பேரூர் படிதுறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பேரூர் வேடப்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.

மேலும் படிக்க