• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..! – தளர்வுகள் என்னென்ன ?

July 29, 2020 தண்டோரா குழு

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில்
ஜூலை 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தொடரும். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி; பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும்.இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை விலக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களிலும் மக்கள் வெளியில் நடமாடலாம். மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள்,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும்.

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை.65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி; நாடு முழுவதும் குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க