• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா பறிமுதல்

July 29, 2020 தண்டோரா குழு

கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை துடியலூர் போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த டிரைவர் காலனி பகுதியில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து விறபனை செய்வதாக துடியலூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு அங்கு சென்ற துடியலூர் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் டிரைவர் காலனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டுபிடித்தனர். வீட்டில் குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துதது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த துடியலூர் போலீசார் இது தொடர்ந்து குட்காவை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும் படிக்க