• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாகாளியம்மன் கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்கள்

July 18, 2020 தண்டோரா குழு

கோவை ஐந்து முக்கு எனும் இடத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இக்கோவில் மீது தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ வைத்து சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.கோயில் வாசலில் உள்ள வேல், கட்ட கூறை தீ புகையால் கருப்பாக காணப்படுகின்றது.நள்ளிரவு அல்லது அதிகாலை நடந்திருக்க கூடும் என்ற நிலையிலே இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன் கோயில் முகப்பில் தீ வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.சம்பவ இடததில் உக்கடம் போலிசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க