• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில்எஸ்.எல்.சி – பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.

கோவையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவ மாணவிகளுக்கு வழங்கும் வகையில் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். புத்தகங்கள் வாங்க வந்திருந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நின்றிருந்தனர்.சக மாணவ மாணவிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

புத்தகங்களை வாங்கிய பின்னர் அவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.நேற்று ஒரே நாளில் மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகள் 75 சதவீதம் பேருக்கும் பிளஸ் டூ 55 சதவீத பேரும் புத்தகங்கள் விநியோகம் செய்யப் பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க