• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில்எஸ்.எல்.சி – பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.

கோவையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவ மாணவிகளுக்கு வழங்கும் வகையில் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். புத்தகங்கள் வாங்க வந்திருந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நின்றிருந்தனர்.சக மாணவ மாணவிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

புத்தகங்களை வாங்கிய பின்னர் அவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.நேற்று ஒரே நாளில் மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகள் 75 சதவீதம் பேருக்கும் பிளஸ் டூ 55 சதவீத பேரும் புத்தகங்கள் விநியோகம் செய்யப் பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க