• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று முதல் சித்த மருத்துவ முறைப்படி கொரோனா சிகிச்சை

July 15, 2020 தண்டோரா குழு

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு இன்று முதல் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கோவையில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கொரோனா கண்காணிப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய முயற்சியாக நாளை முதல் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ள நிலையில் கோவையிலும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சித்த மருத்துவம் மேற்கொள்ள விருப்பமுள்ள 25 நோயாளிகளை தேர்வு செய்து முற்றிலும் சித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இதற்காக கொடிசியா வளாகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க