July 15, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்தது. இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 68 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்தது. இதையடுத்து, தமிழகம்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை கடந்த 2வது மாநிலமானது.
தமிழகத்தில் இன்று 41,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 17,36,747 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.