• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கோவை மாநகராட்சியின் அறிவிப்பு

July 15, 2020 தண்டோரா குழு

உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு அந்தந்த பள்ளிச் சத்துணவு மையங்களில் வழங்கப்படும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்க கீழ் உணவு உண்ணும் பயனாளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு அந்தந்த பள்ளிச் சத்துணவு மையங்களில் வழங்கப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மட்டும் 16.07.2020 முதல் 23.07.2020 முடிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக பள்ளி
வேலை நாட்களில் (5 நாட்கள்) முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும் அவர்களது குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று உலர் உணவுப்பொருட்களான அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறியுள்ளது.

மேலும் படிக்க