கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1480 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது. தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல், கொரோனா வைரசை கட்டுப்பட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.
இந்த சூழலில், மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !