• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையலடைத்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பேப்ரிகேஷன் பணி செய்து வருகிறார்.அவர் அடிக்கடி கிரிகெட் விளையாட்டிற்காக அந்த பகுதியலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் மணிக்கண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு கடத்தி சென்றுள்ளார். இதனிடையே தங்களது மகளை காணாதாதல் அதிர்ச்சிக்குள்ளான, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை கைது செய்ததுடன் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.மேலும் மணிகண்டன் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் படிக்க