• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப தகராறை தடுக்க சென்ற அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து- டிரைவர் கைது

July 14, 2020 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (29) டிரைவர். இவரது மனைவி சங்கீதா 25. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குமரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது இதனால் சங்கீதா கோபித்துக்கொண்டு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வடிவேலம்பாளையம் அதில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்ற குமரேசன் அவரை தன்னுடன் வந்து விடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதை கண்ட சங்கீதாவின் உறவினர்கள் கருப்புசாமி 35 அவரது தம்பி அஜித் 32 ஆகியோர் அங்கு வந்து குமரேசனை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்புசாமி மற்றும் அஜித்தை சரமாரியாக குத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து கருப்பசாமி ஆலந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க