• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சிலையை காணவில்லை – இந்து முன்னணியினர் போலீசில் புகார்

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் விநாயகர் சிலை காணாமல் போனதாக இந்து முன்னணி கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் அரசமர விநாயகர் கோவிலானது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விநாயகர் சிலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்றைய தினம் கோவில் பூசாரி விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை சென்றபோது சிலை காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .

அதில் கூறப்பட்டுள்ளதாவது

சிலை சம்பந்தமாக வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த விநாயகர் சிலையை காணாமல் போனதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடித்து தருமாறும்,சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.

மேலும் படிக்க