• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சிலையை காணவில்லை – இந்து முன்னணியினர் போலீசில் புகார்

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் விநாயகர் சிலை காணாமல் போனதாக இந்து முன்னணி கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் அரசமர விநாயகர் கோவிலானது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விநாயகர் சிலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்றைய தினம் கோவில் பூசாரி விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை சென்றபோது சிலை காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .

அதில் கூறப்பட்டுள்ளதாவது

சிலை சம்பந்தமாக வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த விநாயகர் சிலையை காணாமல் போனதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடித்து தருமாறும்,சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.

மேலும் படிக்க